பதிவு செய்த நாள்
11 மே2014
04:42
புதுடில்லி:கடந்த 2013–14ம் நிதியாண்டில், நம் நாட்டில் இருந்து மேற்கொள்ளப்பட்ட நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 11 சதவீதம் சரிவடைந்து, 2.10 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 2.13 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.சர்வதேச பொருளாதார மந்த நிலை, தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் போன்றவற்றால், கடந்த நிதியாண்டில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது.இருப்பினும், கடந்த நிதியாண்டில், நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, 12.65 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.19 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, இக்கவுன்சில் மேலும் தெரிவித்துள்ளது.இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதத்திலும், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 8.1 சதவீதம் குறைந்து, 19,620 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது என, வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|