நவ­ரத்­தி­னங்கள், ஆப­ர­ணங்கள்ஏற்­று­மதி 11 சத­வீதம் சரிவுநவ­ரத்­தி­னங்கள், ஆப­ர­ணங்கள்ஏற்­று­மதி 11 சத­வீதம் சரிவு ... நிலக்­கரி இறக்­கு­மதி 1.52 கோடி டன்­னாக சரிவு நிலக்­கரி இறக்­கு­மதி 1.52 கோடி டன்­னாக சரிவு ...
நோக்­கி­யாவின் 2,000 ஊழி­யர்கள்வி­ருப்ப ஓய்­விற்கு ஒப்­புதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2014
04:45

நோக்­கியா இந்­தியா நிறு­வ­னத்தை சேர்ந்த, 2,000 ஊழி­யர்கள், ­வி­ருப்ப ஓய்வில் செல்ல ஒப்­புதல் அளித்து உள்­ளனர். இதில், 730 பயிற்சி பணியா­ளர்­களும் அடங்­குவர்.மைக்­ரோசாப்ட் நிறு­வனம், பின்லாந்தின் நோக்­கியா நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்­து­வது தொடர்­பான பணிகள், சென்ற ஏப்ரல் மாத இறுதியில் முடி­வ­டைந்­தன.விற்பனை வரி:ஆனால், 21ஆயிரம் கோடி ரூபாய் வரு­மான வரி வழக்கு மற்றும் தமிழக அரசின், 2,400 கோடி ரூபாய் விற்­பனை வரி பாக்கி உள்­ளிட்­டவை காரண­மாக, நோக்­கியா இந்­தியா நிறு­வனம் கைய­கப்­ப­டுத்­தப்­ப­டாமல், தனித்து விடப்­பட்­டுள்­ளது.
இந்­நி­று­வ­னத்தின், சென்னை தொழிற்­சா­லையில் மொபைல் போன் உற்­பத்தி, 50 சத­வீ­தத்­திற்கு மேல் குறைக்­கப்­பட்­டுள்­ளது.தற்­போது, இத்­தொ­ழிற்­சாலை, ஒப்­பந்த அடிப்­ப­டையில் மைக்­ரோசாப்ட் நிறு­வ­னத்­திற்கு மொபைல் போன் சாத­னங்­களை தயா­ரித்து அளித்து வரு­கி­றது.இந்­நி­லையில், கடந்த ஏப்ரல் 15ம் தேதி, நோக்­கியா இந்­தியா நிறு­வனம், அதன் சென்னை தொழிற் ­சாலை ஊழி­யர்­க­ளுக்கு, விருப்ப ஓய்வு திட்­டத்தை அறி­வித்­தது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ள சென்னை நோக்­கியா தொழிற்­சங்கம், இப்­பி­ரச்­னையில், தமி­ழக அரசு தலை­யிட்டு, ­விருப்ப ஓய்வு திட்­டத்தை திரும்பப் பெற, ஆவன செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்­துள்­ளது.இந்­நி­லையில், 730 பயிற்சி ஊழியர்­களும், நிறு­வ­னத்தின், 5,500 ஊழி­யர்­களில், 1,000 பேரும், வி­ருப்ப ஓய்வு திட்­டத்­திற்கு ஒப்புதல் அளித்­துள்­ளனர்.
இத்­துடன் மேலும், 500 பேர் ஆத­ரவு தெரி­விக்க உள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.இதர சலுகைகள்:இது­கு­றித்து, நோக்­கியா இந்தியா நிறு­வன செய்தி தொடர்­பாளர் கூறுகையில், ‘ஊழி­யர்கள், விருப்ப ஓய்வு திட்­டத்­திற்கு விண்ணப்­பிக்க, வரும் 14ம் தேதி வரை ‘கெடு’ விதிக்­கப்­பட்­டுள்­ளது’ என்று தெரிவித்தார்.குறிப்­பிட்ட நாளுக்கு பின், நோக்கியா நிறு­வனம், ஊழி­யர்­களுக்­கான பேருந்து வசதி உள்­ளிட்ட இதர சலு­கை­களை நிறுத்தக் கூடும். இத்­த­கைய அறி­விப்பு, ஊழியர்­ களுக்கு நிறு­வனம் விடுத்த மறைமுக அச்சு­றுத்தல் என, தொழிற்­சங்­கத்­தினர் தெரி­வித்­துள்­ளனர்.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)