பதிவு செய்த நாள்
12 மே2014
00:37
புதுடில்லி:சர்வதேச அளவில், உணவு பொருட்களின் விலை, மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது, சென்ற ஏப்ரலில், 1.6 சதவீதம் குறைந்துள்ளது என, ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான உணவு மற்றும் வேளாண் பொருட்கள் கூட்டமைப்பு (எப்.ஏ.ஓ.,) தெரிவித்துள்ளது.சென்ற ஏப்ரலில், பால், சர்க்கரை மற்றும் தாவர எண்ணெய் ஆகியவற்றின் விலை சரிவடைந்துஉள்ளதையடுத்து, உலக அளவில் உணவுப் பொருட் களின் விலை குறைந்துள்ளது என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.குறிப்பாக, சென்ற ஏப்ரல் மாதத்தில், சீனா மற்றும் ரஷ்ய நாடுகள், பால் பொருட்கள் கொள்முதலை குறைத்துக் கொண்டதையடுத்து, இவற்றின் விலை, 6.9 சதவீதம் குறைந்துள்ளது.இதே போன்று, சர்வதேச அளவில் சர்க்கரை விலையும், 1.6 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் சர்க்கரை இருப்பு உயர்ந்துஉள்ளதே முக்கிய காரணம்.மேலும், உலகளவில், தாவர எண்ணெய் விலையும், 2.8 சதவீதம் குறைந்துள்ளது என, எப்.ஏ.ஓ., மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|