‘ஸ்மார்ட்போன்’ பயன்­பாடு 52 கோடி­யாக அதிகரிக்கும்‘ஸ்மார்ட்போன்’ பயன்­பாடு 52 கோடி­யாக அதிகரிக்கும் ... ‘கைத்­தறிக்கு முக்­கி­யத்­துவம் அளிக்க வேண்டும்’ ‘கைத்­தறிக்கு முக்­கி­யத்­துவம் அளிக்க வேண்டும்’ ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு சார்ந்த நிதி திட்­டங்­களில்முத­லீட்­டா­ளர்கள் மீண்டும் ஆர்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2014
00:42

கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக நலி­வு அடைந்து காணப்­பட்ட, பங்கு சார்ந்த பரஸ்­பர நிதி திட்­டங்­க­ளுக்கு, தற்­போது வர­வேற்பு பெருகி வரு­கி­றது.இது­வரை பாரா­மு­க­மாக இருந்த சில்­லரை முத­லீட்­டா­ளர்­களின் கவனம், பங்குச் சந்­தையின் எழுச்­சியால், பங்கு சார்ந்த பரஸ்­பர நிதி திட்டங்கள் மீது மீண்டும் திரும்­பி­யுள்­ளது.இதனால், கடந்த நான்கு ஆண்­டு­களில் இல்­லாத அள­விற்கு, சென்ற ஏப்­ரலில், பங்கு சார்ந்த பரஸ்­பர நிதி திட்­டங்­களில், நிகர அளவில், 4 லட்சம் புதிய முத­லீட்­டா­ளர்கள் இணைந்­துஉள்­ளனர்.
கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம், பங்கு சார்ந்த பரஸ்­பர நிதி திட்­டங்­களில், 4.11 கோடி கணக்­கு­களின் கீழ், முத­லீடு மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. எனினும், சர்­வ­தேச நிதி நெருக்­கடி பிரச்­னையால், பங்குச் சந்தை வீழ்ச்சி காணத் துவங்­கி­யது.இதை­ய­டுத்து, அதே ஆண்டு, மார்ச் இறுதி முதல், நடப்­பாண்டு ஏப்ரல் வரை, பங்கு சார்ந்த பரஸ்­பர நிதி திட்டங்­களின் கீழ், 1.20 கோடி கணக்­குகள் முடிக்­கப்­பட்­டன.தற்­போது, சர்­வ­தேச பொரு­ளா­தாரம் வளர்ச்சி காண்­ப­தற்­கான சூழல் தென்­ப­டு­வ­தாலும், மத்­தியில் ஸ்திர­மான புதிய அரசு அமையும் என்ற நம்­பிக்­கை­யாலும், பங்கு சார்ந்த பரஸ்­பர நிதி திட்டங்­களில் முத­லீடு அதி­க­ரிக்கத் துவங்­கி­யுள்­ளது.
இது குறித்து, இந்­திய பரஸ்­பர நிதி கூட்­ட­மைப்பின் தலைமை செயல் அதிகாரி எச்.என்.சினார் கூறி­ய­தா­வது:மீண்டும் மகிழ்ச்­சி­யான காலம் பிறந்து உள்­ளது. கடந்த ஆண்டு நவம்பர் முதல், பரஸ்­பர நிதி திட்­டங்­களில், சில்லரை முத­லீட்­டா­ளர்­களின் பங்­க­ளிப்பு அதி­க­ரித்து வரு­கி­றது. இது தொடரும் என்ற நம்­பிக்கை உள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.சென்ற ஏப்ரல் இறுதி நில­வ­ரப்­படி, பங்கு சார்ந்த பரஸ்­பர நிதி திட்­டங்­களின் கீழ், 2.95 கோடி கணக்­குகள் செயல்­பாட்டில் உள்­ளன என்­பது குறிப்பி­டத்­தக்­கது.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)