பதிவு செய்த நாள்
13 மே2014
01:36
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நேற்று, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.கடந்த வார இறுதியில், ரூபாய் மதிப்பு, 60.03ஆக இருந்தது. நடப்பு வாரத்தின் துவக்க நாளான நேற்று, அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 7 காசுகள் அதிகரித்து, 59.96ஆக காணப்பட்டது.
நேற்று, லோக்சபா தேர்தலின் இறுதிக்கட்ட ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை எதிர்பார்த்து, பங்குச் சந்தைகளில் எழுச்சி காணப்பட்டது.அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகளின், ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ குறியீட்டு எண்கள் புதிய உச்சத்தை எட்டின.இதன் தாக்கத்தாலும், மத்தியில் வலுவான அரசு அமையும் என்ற எதிர்பார்ப்பாலும், டாலருக்கான தேவை குறைந்தது.
இதனால், கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு, ரூபாய் மதிப்பு, 0.85 சதவீதம் அதிகரித்து, 59.50 ஆக உயர்ந்தது. இது, கடந்த ஆண்டு, ஜூலை 29ம் தேதிக்கு பின் காணப்பட்ட உயர்வாகும்.எனினும் பிற்பகலில், இறக்குமதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவை அதிக அளவில் டாலரை வாங்கின.இதனால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, கிடுகிடுவென சரிவடைந்தது. வர்த்தகத்தின் இறுதியில் 0.02 காசுகள் குறைந்து, 60.05ல் நிலை கொண்டது.நடப்பாண்டில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 3.46 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், 555 கோடி டாலர் (33,300 கோடி ரூபாய்) அளவிற்கு, பங்குகளில் முதலீடு செய்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|