பதிவு செய்த நாள்
13 மே2014
01:47
புதுடில்லி:இந்தியா உட்பட, 46 நாடுகள் வரி ஏய்ப்பு உள்ளிட்ட அனைத்து வரிகள் சார்ந்த தகவல்களை, தன்னிச்சையாக பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு :நடப்பு மே மாதம் 6ம் தேதி, பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு (ஓ.இ.சி.டீ.,) மாநாட்டில், 46 நாடுகளுக்குள் வரிகள் சார்ந்த அனைத்து தகவல்களையும், தன்னிச்சையாக பரிமாறிக் கொள்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில், சுவிட்சர்லாந்தும் அடங்கும்.
மேலும், ஓ.இ.சி.டீ., மற்றும் ஜி20 நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளும், வரி தகவல் சார்ந்த நிர்வாக தகவல்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது என, முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் இந்தியா கையொப்பம் இட்டுள்ளது. ஆனால், ஓ.இ.சி.டீ.,ல் உறுப்பு நாடாக உள்ள சுவிட்சர்லாந்து, தீர்மானத்தை செயல்படுத்த முடியாது என, தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, வரி சார்ந்த தகவல்களை பரிமாறிக் கொள்வது தொடர்பாக, இந்தியா தொடர்ந்து சுவிட்சர்லாந்தை வலியுறுத்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|