பதிவு செய்த நாள்
13 மே2014
01:48
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று, மிகவும் சிறப்பாக இருந்தது.வரும் 16ம் தேதி (வெள்ளிக்கிழமை) லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.இத்தேர்தலில், பா.ஜ., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்ற கருத்தால், நேற்றைய பங்கு வர்த்தகத்தில், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.பொறியியல்பா.ஜ., 200 – 220 இடங்களை பெறும் நிலையில், பங்கு வர்த்தகம், மேலும் புதிய உச்சத்தை எட்டும் என்ற கருத்தும் உள்ளது. அவ்வாறு இக்கட்சி அதிக இடங்களை பெறாவிட்டால், பங்கு வர்த்தகம் சரிவடையவும் வாய்ப்புள்ளது என, பங்குச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மத்தியில் வலுவான ஆட்சி அமையும் நிலையில், அது, நாட்டின் அடிப்படை கட்டமைப்பு, பொறியியல், ஜவுளி, சிமென்ட், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளில், முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என, கருதப்படுகிறது.இதன் காரணமாக, நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’, 23,500 புள்ளிகளையும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’ 7,000 புள்ளிகளையும் தாண்டி, புதிய சாதனை படைத்தன.அன்னிய நிதி நிறுவனங்கள்கடந்த ஒரு சில மாதங்களாகவே, இந்தியாவில், வலுவான ஆட்சி அமையும் என்ற கருத்தால், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் அதிகளவில் முதலீடு மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில், நேற்றைய தினம், அன்னிய நிதி நிறுவனங்கள், 1,269 கோடி ரூபாயை, பல்வேறு நிறுவன பங்குகளில் முதலீடு செய்தன.சர்வதேச நிலவரங்களும், இந்திய பங்கு வர்த்தகத்திற்கு வலுச்சேர்ப்பதாக அமைந்தது. நேற்று, ஐரோப்பா மற்றும் ஜப்பான் தவிர்த்த, இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.நேற்றைய பங்கு வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, மின்சாரம், மோட்டார் வாகனம், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.அதேசமயம், மருந்து துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, தேவை குறைந்துஇருந்தது.
வர்த்தகம் முடியும் போது, ‘சென்செக்ஸ்’ ஒரே நாளில், 556.77 புள்ளிகள் (2.42 சதவீதம்) அதிகரித்து, 23,551 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், கோல் இந்தியா, எச்.டீ.எப்.சி. பேங்க், டாட்டா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஐ.டி.சி., உள்ளிட்ட, 25 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்து காணப்பட்டது.தேசிய பங்குசந்தை:அதேசமயம், சன்பார்மா, சிப்லா, ஹிண்டால்கோ, விப்ரோ மற்றும் டி.சி.எஸ்., ஆகிய ஐந்து நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 155.45 புள்ளிகள் (2.27 சதவீதம்) உயர்ந்து, 7,014.25 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|