வரி ஏய்ப்பு தக­வலை பரி­மாற46 நாடுகள் ஒப்­புதல்: சிதம்­பரம்வரி ஏய்ப்பு தக­வலை பரி­மாற46 நாடுகள் ஒப்­புதல்: சிதம்­பரம் ... ரூபாயின் மதிப்பு அதிரடி உயர்வு - ரூ.59.68 ரூபாயின் மதிப்பு அதிரடி உயர்வு - ரூ.59.68 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘சென்செக்ஸ், நிப்டி’ புதிய உச்­சத்தை எட்­டி­யது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2014
01:48

மும்பை:நாட்டின் பங்கு வர்த்­தகம் நேற்று, மிகவும் சிறப்­பாக இருந்­தது.வரும் 16ம் தேதி (வெள்­ளிக்­கி­ழமை) லோக்­சபா தேர்தல் முடி­வுகள் வெளி­யா­க­வுள்­ளன.இத்­தேர்­தலில், பா.ஜ., பெரும்­பான்­மை­யுடன் ஆட்சி அமைக்கும் என்ற கருத்தால், நேற்­றைய பங்கு வர்த்­த­கத்தில், பல துறை­களைச் சேர்ந்த நிறு­வனப் பங்­குகள், அதிக விலைக்கு கைமா­றின.பொறியியல்பா.ஜ., 200 – 220 இடங்களை பெறும் நிலையில், பங்கு வர்த்தகம், மேலும் புதிய உச்­சத்தை எட்டும் என்ற கருத்தும் உள்­ளது. அவ்­வாறு இக்­கட்சி அதிக இடங்­களை பெறா­விட்டால், பங்கு வர்த்­தகம் சரி­வ­டை­யவும் வாய்ப்­புள்­ளது என, பங்குச் சந்தை ஆய்­வா­ளர்கள் தெரி­வித்­தனர்.
மத்­தியில் வலு­வான ஆட்சி அமையும் நிலையில், அது, நாட்டின் அடிப்­படை கட்டமைப்பு, பொறி­யியல், ஜவுளி, சிமென்ட், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறை­களில், முன்­னேற்­றத்தை ஏற்படுத்தும் என, கரு­தப்­ப­டு­கி­றது.இதன் கார­ண­மாக, நேற்றைய வர்த்­த­கத்தில், மும்பை பங்குச் சந்­தையின் குறி­யீட்டு எண் ‘சென்செக்ஸ்’, 23,500 புள்ளிகளையும், தேசிய பங்குச் சந்­தையின் குறி­யீட்டு எண், ‘நிப்டி’ 7,000 புள்­ளி­களையும் தாண்டி, புதிய சாதனை படைத்தன.அன்­னிய நிதி நிறு­வ­னங்கள்கடந்த ஒரு சில மாதங்­களா­கவே, இந்­தி­யாவில், வலு­வான ஆட்சி அமையும் என்ற கருத்தால், அன்­னிய நிதி நிறு­வனங்கள், இந்­திய பங்குச் சந்தை­களில் அதி­க­ளவில் முத­லீடு மேற்­கொண்டு வரு­கின்­றன.இந்­நி­லையில், நேற்றைய தினம், அன்­னிய நிதி நிறுவனங்கள், 1,269 கோடி ரூபாயை, பல்­வேறு நிறு­வன பங்­கு­களில் முத­லீடு செய்­தன.சர்­வ­தேச நில­வ­ரங்­களும், இந்­திய பங்கு வர்த்­த­கத்­திற்கு வலுச்­சேர்ப்­ப­தாக அமைந்­தது. நேற்று, ஐரோப்பா மற்றும் ஜப்பான் தவிர்த்த, இதர ஆசியப் பங்குச் சந்­தை­க­ளிலும் வர்த்­தகம் சிறப்­பாக இருந்­தது.நேற்­றைய பங்கு வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, மின்­சாரம், மோட்டார் வாகனம், பொறி­யியல் உள்ளிட்ட பல துறை­களைச் சேர்ந்த நிறு­வனப் பங்­குகள், அதிக விலைக்கு கைமா­றின.அதே­ச­மயம், மருந்து துறையைச் சேர்ந்த நிறு­வனப் பங்­கு­க­ளுக்கு, தேவை குறைந்து­இருந்­தது.
வர்த்­தகம் முடியும் போது, ‘சென்செக்ஸ்’ ஒரே நாளில், 556.77 புள்­ளிகள் (2.42 சதவீதம்) அதி­க­ரித்து, 23,551 புள்ளி­களில் நிலை­கொண்­டது.‘சென்செக்ஸ்’ கணக்­கிட உதவும், 30 நிறு­வ­னங்­களுள், கோல் இந்­தியா, எச்.டீ.எப்.சி. பேங்க், டாட்டா மோட்டார்ஸ், ஹீரோ மோட்­டோகார்ப், ஐ.டி.சி., உள்­ளிட்ட, 25 நிறுவனப் பங்­கு­களின் விலை அதி­க­ரித்து காணப்­பட்­டது.தேசிய பங்குசந்தை:அதே­ச­மயம், சன்­பார்மா, சிப்லா, ஹிண்­டால்கோ, விப்ரோ மற்றும் டி.சி.எஸ்., ஆகிய ஐந்து நிறு­வனப் பங்­கு­களின் விலை குறைந்­தி­ருந்­தது.தேசிய பங்குச் சந்­தையின் குறி­யீட்டு எண், ‘நிப்டி’, 155.45 புள்­ளிகள் (2.27 சத­வீதம்) உயர்ந்து, 7,014.25 புள்­ளி­களில் நிலை­பெற்­றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)