தங்கம் விலை ரூ.40 உயர்ந்ததுதங்கம் விலை ரூ.40 உயர்ந்தது ... மீன் வரத்து குறைவு: விலை கடும் உயர்வு மீன் வரத்து குறைவு: விலை கடும் உயர்வு ...
சென்னையில் டீசல் விலை ரூ.1.32 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2014
15:54

புதுடில்லி: டீசல் விலை, லிட்டருக்கு, 1.09 ரூபாய் நேற்று உயர்த்தப்பட்டது. தமிழகத்தில், உள்ளூர் வரிகள் சேர்த்து, இந்த விலை உயர்வு, 1.32 ரூபாயாக இருக்கும். நேற்று நள்ளிரவு முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும், வருவாய் இழப்பை ஈடுகட்ட, ஒவ்வொரு மாதமும் குறைவான அளவில், டீசல் விலையை உயர்த்துவது என, 2013 ஜனவரியில் முடிவு செய்யப்பட்டது. அப்படி, கொஞ்சம் கொஞ்சமாக டீசல் விலை உயர்த்தப்பட்டும், ஏப்ரல் மாத நிலவரப்படி, டீசல் விற்பனையில், லிட்டருக்கு, 6.80 ரூபாய் அளவுக்கு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வந்தன. இருந்தும், ஏப்ரல் முதல் தேதி டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அதேபோல், மே முதல் தேதியும் உயர்த்தப்படவில்லை.
இந்நிலையில், டீசல் விலை தொடர்பாக ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட, கீர்த்தி பரேக் கமிட்டி, 'டீசலுக்கான மானியமாக, அரசு லிட்டருக்கு ஆறு ரூபாய் வழங்க முன்வந்தால், இனியும் டீசல் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்காது' என, தெரிவித்தது. பரேக் கமிட்டியின் பரிந்துரைகளை, இன்னும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.
இதற்கிடையில், தேர்தல் ஆணையத்திடம் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கோரிக்கை மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், மாதந்தோறும் உயர்த்தப்படும் டீசல் விலையை, லோக்சபா தேர்தலை ஒட்டி, தற்காலிகமாக தள்ளிப் போட அனுமதிக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தது. வழக்கமாக உயர்த்தப்படும் டீசல் விலையை தேர்தல் நேரத்தில் உயர்த்தாமல் இருந்தால், அது தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறிய செயல் என்பதால், இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு தேர்தல் ஆணையம் ஒரு மாதத்திற்கு மேலாக பதில் அளிக்கவில்லை. தற்போது, பெட்ரோலிய அமைச்சக கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. டீசல் விலையை உயர்த்துவது தொடர்பாக, அமைச்சகமே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என, தெரிவித்துள்ளது.
இந்நிலையில், லோக்சபா தேர்தலின் ஒன்பதாவது மற்றும் கடைசி கட்ட தேர்தல், நேற்று மாலை 6:00 மணியுடன் முடிவடைந்ததை அடுத்து, டீசல் விலை லிட்டருக்கு, 1.09 ரூபாய் உயர்த்தப்பட்டது. உள்ளூர் வரிகள் சேர்த்து, தமிழகத்தில் இந்த விலை உயர்வு, 1.32 ரூபாயாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில், தற்போது டீசல் விலை, 59.18 ரூபாய். இதில், 1.32 ரூபாய் உயர்த்தப்பட்டு, நேற்றிரவு முதல், 60.50 ரூபாயாக விற்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)