பதிவு செய்த நாள்
13 மே2014
15:56
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கரை வலை உள்ளிட்ட பாரம்பரிய வலைகள் மூலம் பிடிக்கப்படும் மீன்கள் மிக ருசியாக இருப்பதாலும், மீன்வரத்து குறைவாக இருப்பதாலும், இவற்றின் விலை ஒரு மடங்கு உயர்ந்துள்ளது.
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, 45 நாட்கள் மீன்பிடி தடை அமலில் உள்ளதால், விசைப்படகுகள் கடலுக்குள் செல்லவில்லை. நாட்டுப் படகுகள் மீனவர்கள் மற்றும் ராமேஸ்வரம் ஓலைக்குடா, அக்னி தீர்த்தம், சேராங்கோட்டை, முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி கடற்கரையில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் மீனவர்கள் மட்டுமே கடந்த சில நாள்களாக, ஓலை வலை, நண்டு வலை, கரை வலையில் மீன்பிடித்து வருகின்றனர். நண்டு, கணவாய், வெளமீன், நகரை, ஊடகம் போன்ற ருசியான மீன்கள் அதிகமாக சிக்குவதால், இம்மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனானும், வரத்து குறைவால், கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.200க்கு விற்ற நகரை, வெளமீன், கௌக்கான் மீன்கள் தற்போது 300 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.
கண்மாய் மீன்களுக்கு கிராக்கி: கடல்மீன் வரத்து இல்லாததால், கண்மாய் மீன்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. ஆனால், வறட்சியால் தண்ணீரில்லாத குளம், குட்டைகளில் தேங்கி கிடக்கும் சகதிகளில் இருந்து பிடிக்கப்படும் கட்லா, தேழி மீன்கள், கிலோ ரூ. 140 முதல் ரூ.160 வரை விற்கப்படுகிறது. தற்போது பெய்துள்ள கோடை மழையால், ஓரளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ள குளம், குட்டைகளில் கிடக்கும் மீன்களை பிடிக்கும் முயற்சியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மீன் வியாபாரிகள் கூறுகையில், 'கடல் மீன்களில் அதிக முட்கள் உள்ள குறிப்பிட்ட ரகங்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன. ஓட்டல் நடத்துபவர்கள், மீன் குழம்பிற்காக, இவற்றை வாங்கிச் செல்கின்றனர். நுகர்வோர்களின் தேவையை கண்மாய் மீன்கள் தான் ஓரளவிற்கு பூர்த்தி செய்கின்றன. வரத்து குறைவு, தேவை அதிகம் என்பதால் கண்மாய் மீன்களின் விலை உயர்ந்துள்ளது,' என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|