பதிவு செய்த நாள்
13 மே2014
17:26
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளில், இந்திய பங்குசந்தைகள் புதிய வரலாற்று சாதனையை படைத்தன. சென்செக்ஸ் புதிய உச்சமாக 24 ஆயிரம் புள்ளிகளை தொட்டது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருப்பதாக கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதனால் இன்றைய பங்குவர்த்தகம் காலைமுதலே அதிரடியாக உயர்ந்து இருந்தன. மேலும் அந்நிய முதலீடுகள் அதிகரித்ததாலும், முக்கிய நிறுவனங்களின் பங்குகள் விலை கணிசமாக உயர்ந்ததாலும் சென்செக்ஸ் முதன்முறையாக 24 ஆயிரம் புள்ளிகளை தொட்டு வரலாற்று சாதனை படைத்தன. இருப்பினும் இறுதியில் 24 ஆயிரத்திற்கு கீழ் முடிந்தது சென்செக்ஸ்.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 320.23 புள்ளிகள் உயர்ந்து 23,871.23-ஆக முடிந்தது. முன்னதாக வர்த்தகநேரத்தின் போது சென்செக்ஸ் அதிகபட்சமாக 24,068.94 வரை சென்றது. இதேப்போல் தேசிய பங்குசந்தையான நிப்டி 94.50 புள்ளிகள் உயர்ந்து 7,108.75-ஆக முடிந்தது. இது 7,172.35-வரை வர்த்தகமாகின.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் அநேக நிறுவன பங்குகள் விலை உயர்வுடன் முடிந்தன. குறிப்பாக பெல் நிறுவன பங்குகள் விலை 10.25 சதவீதம் உயர்ந்தது. இதற்கு அடுத்தப்படியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டே கார்ப், எல்அண்ட்டி., ஓஎன்ஜிசி., டாடா பவர், நுவர்வோர் பங்குகள், ஐ.டி. பங்குகள் உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிக ஏற்றத்துடன் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|