பதிவு செய்த நாள்
14 மே2014
00:28
புதுடில்லி:‘‘வசதி இருந்தும் கடனை திரும்ப தராதவர்கள் மீது, வங்கிகள், குழு அமைத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து, பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களிடையே அவர் உரையாற்றிய விவரம்:
நிறுவனர் வளமாக வாழ்வதும், அவரது நிறுவனம் மட்டும் நலிவுற்று இருப்பதாககூறுவதையும் ஏற்க முடியாது. இது போன்று, வங்கியில் கடன் பெற்று, திரும்ப தராத வசதி படைத்தவர்களிடம், கடுமையாக நடவடிக்கை எடுத்து, கடனை, வங்கிகள் மீட்க வேண்டும். இதற்காக, வங்கிகள், குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிக ஸ்திரத்தன்மைக்கான சூழல் நிலவிய போதிலும், கடந்த நிதியாண்டு கடுமையானதாக இருந்தது. நிதி மற்றும் மானியக் கொள்கை களால் மட்டுமே, பணவீக்கத்தை, குறிப்பாக, உணவு பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாது; இதற்கு, வலிமையான, அடிப்படையான சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை. இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|