பதிவு செய்த நாள்
14 மே2014
00:34
புதுடில்லி:சென்ற ஏப்ரல் மாதம், முன்பேர சந்தைகளின் வர்த்தகம், 69 சதவீதம் சரிவடைந்து, 4.64 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில், 14.77 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.இதே காலத்தில், அதிகபட்சமாக, தங்கம், வெள்ளி மீதான முன்பேர வர்த்தகம், 76 சதவீதம் குறைந்து, 7.15 லட்சம் கோடியில் இருந்து, 1.68 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.இவற்றை அடுத்து, எரிபொருட்கள், அடிப்படை உலோகங்கள் மற்றும் வேளாண் விளை பொருட்கள் ஆகியவற்றின் மீதான, முன்பேர வர்த்தகம் வெகுவாக குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் போன்ற எரிபொருட்கள் மீதான முன்பேர வர்த்தகம், 70 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது என, பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|