பதிவு செய்த நாள்
14 மே2014
00:36
புதுடில்லி:மாருதி சுசூகி நிறுவனத்தின், 'ஆல்டோ' கார் விற்பனை, 25 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 2000ம் ஆண்டு, அறிமுகமான 'ஆல்டோ' கார், 14 ஆண்டுகளுக்கு உள்ளாக, இச்சாதனையை படைத்துள்ளது.இதற்கு முன், இதே நிறுவனத்தின், 'மாருதி 800' கார் மட்டுமே, இத்தகைய சாதனையை நிகழ்த்தி இருந்தது.
உள்நாடு தவிர, வெளிநாடுகளுக்கும், 2.85 லட்சம் 'ஆல்டோ' கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.கடந்த 2010ம் ஆண்டு, 1,000 சி.சி., திறனில் அறிமுகமான, ‘ஆல்டோ – கே 10’ கார் விற்பனை, 4 லட்சத்தை தாண்டியுள்ளது.நடப்பாண்டு ஜனவரியில், ‘மாருதி 800’ கார் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. இதன் மேம்பட்ட வடிவமைப்பான, ‘ஆல்டோ 800’ கார், கடந்த 2012ம் ஆண்டு வெளியாகி, தொடர்ந்து நடுத்தர மக்களின் விருப்பமான, கார் என்ற சிறப்புடன் சாலைகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|