பதிவு செய்த நாள்
14 மே2014
00:43
மும்பை:இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,) நிறுவனம், சரக்கு போக்குவரத்து சேவை தொடர்பாக, 4.60 கோடி ரூபாய் வரி செலுத்தக் கோரி, மத்திய கலால் புலனாய்வு தலைமை இயக்குனரகம் (டீ.ஜி.சி.இ.ஐ.,) நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.டீ.ஜி.சி.இ.ஐ., தலைமை இயக்குனர் சமன்ஜசா தாஸ் அனுப்பியுள்ள அந்த அறிக்கையில் உள்ள விவரம் வருமாறு:சாலை வழியே சரக்கை கொண்டு செல்லும்போது, சுங்கச் சாவடிகளில் செலுத்தப்படும் கட்டணமும், சரக்கு போக்குவரத்து செலவினத்தில் அடங்கும். சுங்க வரி செலுத்தாமல், சரக்கு போக்குவரத்து சேவை மேற்கொள்ள முடியாது.சரக்கு போக்குவரத்து சேவைக்கான வரி மதிப்பீட்டில், சுங்க வரி செலவையும் கணக்கிட வேண்டும். இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை; பிரிக்க முடியாது. முக்கிய சாலைகளில், சுங்க வரி செலுத்தாமல், வாகனங்களில் சரக்கு கொண்டு செல்ல முடியாது.இந்த வகையில், கடந்த 2008ம் ஆண்டு அக்., முதல், 2013 செப்., வரையிலான காலத்தில், ஐ.ஓ.சி., சுங்கச் சாவடி கட்டணத்திற்காக வழங்கிய தொகையை, வரிக்கு உட்பட்ட செலவின கணக்கில் சேர்க்கவில்லை.ஏன், இதற்காக வட்டி, அபராதம் உள்ளிட்டவற்றுடன், 4.64 கோடி ரூபாய் வரி விதிக்கக்கூடாது என்பதற்கான பதிலை, வரும், 24ம் தேதிக்குள் தெரிவிக்கவும்.இவ்வாறு, அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|