பதிவு செய்த நாள்
14 மே2014
00:47
புதுடில்லி:சென்ற ஏப்ரல் மாதத்தில், ஜி.எஸ்.எம்., மொபைல் போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 49.70 லட்சம் அதிகரித்து, 72.69 கோடியாக உயர்ந்துள்ளது என, இந்திய மொபைல் போன் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு (சி.ஓ.ஏ.ஐ.,) தெரிவித்து உள்ளது.
ஏர்டெல்:கடந்த மார்ச் மாதத்தில், ஜி.எஸ்.எம்., மொபைல் போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 72.19 கோடியாக இருந்தது.ஏப்ரலில், பார்தி ஏர்டெல் நிறுவனம், அதிகபட்சமாக, 11.92 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்து கொண்டுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 20.65 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது.
வோடாபோன் நிறுவனம், 7.31 லட்சம் புதிய இணைப்புகளுடன், அதன் ஒட்டு மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையை, 16.72 கோடியாக அதிகரித்துக் கொண்டுள்ளது.
ஐடியா செல்லுலார் நிறுவனத்தில், 7.70 லட்சம் பேர் புதிதாக இணைந்ததையடுத்து, ஒட்டு மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 13.65 கோடியாக உயர்ந்துள்ளது.
ஏர்செல், 9.98 லட்சம் பேரையும் (7.11 கோடி), யூனிநார், 9.68 லட்சம் பேரையும் (3.65 கோடி) புதிதாக இணைத்துக் கொண்டுள்ளன.மேலும், வீடியோகான் நிறுவனத்தில், 2.95 லட்சம் பேரும் (52.82 லட்சம்), எம்.டி.என்.எல்., நிறுவனத்தில், 12,794 பேரும் (32.57 லட்சம்) புதிதாக இணைந்துள்ளனர்.
வளர்ச்சி:இதற்கிடையே, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), சென்ற மார்ச் இறுதி நிலவரப்படி, நாட்டின் ஒட்டு மொத்த தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் (மொபைல் போன் மற்றும் லேண்டு லைன்) எண்ணிக்கை, 0.11 சதவீதம் உயர்ந்து, 93.30 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது என, தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|