பதிவு செய்த நாள்
14 மே2014
00:51
மும்பை:பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்பில் தெரியவந்தது.
இதையடுத்து, அதிகரித்த அன்னிய முதலீடுகளால், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ நேற்று, முதன் முறையாக, வர்த்தகத்தின் இடையே, 24,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் நன்கு இருந்தது.
நேற்றைய வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம், மின்சாரம், எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.அதேசமயம், மருந்து துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும், தேவை குறைந்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 320.23 புள்ளிகள் அதிகரித்து, 23,871.23 புள்ளிகளில் நிலைகொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 24,068.94 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 23,729.25 புள்ளிகள் வரையிலும் சென்றது.‘ சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பெல், ஹீரோ மோட்டோகார்ப், ஓ.என்.ஜி.சி., டாட்டா பவர், விப்ரோ உள்ளிட்ட, 24 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்து காணப்பட்டன.
அதேசமயம், டாக்டர் ரெட்டீஸ், ஹிண்டால்கோ, சன்பார்மா உள்ளிட்ட, 6 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’ 94.50 புள்ளிகள் உயர்ந்து, 7,108.75 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 7,712.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 7,067.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|