பதிவு செய்த நாள்
14 மே2014
00:54
புதுடில்லி:நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் சில்லரை பணவீக்கம், சென்ற ஏப்ரல் மாதத்தில், 8.59 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாகும்.கடந்த மார்ச் மாதத்தில், சில்லரை பணவீக்கம், 8.31 சதவீதமாக இருந்தது.குறிப்பாக, உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம், 9.1 சதவீதத்திலிருந்து, 9.66 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே, சில்லரை பணவீக்க உயர்விற்கு வழிகோலியுள்ளது.
நாட்டின் தொழில்துறை உற்பத்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக, சென்ற மார்ச் மாதத்தில், மைனஸ் 0.5 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது.இது, சென்ற பிப்ரவரியில், மைனஸ் 1.8 சதவீதம் என்ற அளவில் மிகவும் பின்னடைந்திருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், தயாரிப்பு துறை உற்பத்தி, 3.7 சதவீதத்திலிருந்து, 1.2 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம், நுகர்வோர் சாரா துறைகளின் உற்பத்தி, மைனஸ் 1.2 சதவீதத்திலிருந்து, 7.2 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.
பொறியியல் சாதனங்கள் துறை உற்பத்தி, கணக்கீட்டு மாதத்தில், மைனஸ் 17.4 சதவீதத்திலிருந்து, மைனஸ் 12.5 சதவீதமாக பின்னடைவை கண்டுள்ளது.மின் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 11.5 சதவீதத்திலிருந்து, 5.4 சதவீதமாக குறைந்துள்ளது.சென்ற பிப்ரவரியில், 1.4 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்த, சுரங்க துறை உற்பத்தி, மார்ச் மாதத்தில், மைனஸ் 0.4 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது.
ஒட்டு மொத்த அளவில், நாட்டின் தொழில்துறை உற்பத்தி, சென்ற 2013–14ம் நிதியாண்டில், 0.1 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில், தொழில்துறை உற்பத்தி, 1.1 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது என, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க துறை தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|