பதிவு செய்த நாள்
16 மே2014
00:43
கடந்த ஐந்து ஆண்டுகளாக, இந்தியாவின் கோழி இறைச்சி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை, ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு நீக்கியுள்ளது.
சான்றிதழ்:அதே சமயம், கோழி இறைச்சி, பதப்படுத்தப்பட்ட குடல், ஈரல், இரைப்பை உள்ளிட்ட பாகங்களை ஏற்றுமதி செய்வதற்கு முன், இந்திய ஏற்றுமதி ஆய்வு கவுன்சிலின் சுகாதார சான்றிதழ் பெறுவது அவசியம் என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.ஜூலை, 30க்குள் சுகாதார சான்றிதழ் பெற்ற சரக்குகளை, வரும் செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்களுக்குள் ஏற்றுமதி செய்ய, ஐரோப்பிய ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியா, ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் மதிப்பிலான முட்டை, பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி மற்றும் அது சார்ந்த உணவு வகைகளை, ஏற்றுமதி செய்து வருகிறது.இது குறித்து சுகுணா புட்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்) மோகன் வி.கே., கூறியதாவது:
இந்திய கோழி இறைச்சி இறக்குமதிக்கான தடையை, ஐரோப்பிய நாடுகள் நீக்கியுள்ளது, வரவேற்கத்தக்கது. எனினும், கடுமையான நிபந்தனைகளை ஒரு சில ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டுமே பூர்த்தி செய்ய இயலும். இதனால், கோழி வளர்ப்பு துறை முழுமைக்கும் பயன் கிடைக்காது.
தளர்வு:எனினும், இது, இதர நாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க உதவும். நிபந்தனை கள் தளர்த்தப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|