பதிவு செய்த நாள்
16 மே2014
01:11
மும்பை:இன்று பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள் வெளியாவதால், பங்குச் சந்தை மற்றும் அன்னியச் செலாவணி சந்தையில் ஏற்படும் அசாதாரணமான ஏற்ற, இறக்கத்தை தடுக்க தயாராக உள்ளதாக, ரிசர்வ் வங்கியும், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபியும், அறிவித்துள்ளன.
வீழ்ச்சி:கடந்த இரண்டு பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள் வெளியான போது, பங்குச் சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது.கடந்த 2004ம் ஆண்டு, மே, 14ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் உருவானபோது, மும்பை பங்குச் சந்தையின், 'சென்செக்ஸ் 6.1 சதவீதம் :சரிவடைந்தது. மறுநாள், மேலும், 11.4 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இதில், பங்கு முதலீட்டாளர்கள் பல ஆயிரம் கோடி ரூபாயை இழந்தனர்.
எழுச்சி:அது போன்று, கடந்த, 2009ம் ஆண்டு, மே, 18ம் தேதி, பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய, 30 வினாடிகளில், பல முன்னணி நிறுவனப் பங்கு களின் விலை, அதிகபட்ச வரம்பை எட்டின. ஒரே நிமிடத்தில் 'சென்செக்ஸ்' 2,100 புள்ளிகள் உயர்ந்தது. இதைத் தொடர்ந்து,இரண்டு மணி நேரத்திற்கு, பங்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது.பின் பலமுறை தடை செய்யப்பட்டு, இறுதியில் நாள் முழுவதும், பங்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது.அதுபோன்ற நிலை, இன்று ஏற்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என, 'செபி' தலைவர் யு.கே.சின்கா முதலீட்டாளர்களுக்கு உறுதி அளித்து உள்ளார்.
மும்பையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:பங்கு சந்தையில் ஏற்படும் அசாதாரண சூழலை சமாளிக்கக் கூடிய திட்டத்தை,மத்திய அரசு, ரிசர்வ்வங்கி ஆகியவற்றுடன்இணைந்து, 'செபி' உருவாக்கியுள்ளது. சந்தையில், யாரேனும் முறைகேடுகளில் ஈடுபட்டால்,
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|