மோசமான வானிலையால்கருப்பு தேயிலை உற்பத்தி சரிவுமோசமான வானிலையால்கருப்பு தேயிலை உற்பத்தி சரிவு ... உலகளவில் வெள்ளிக்கு மவுசு கூடுகிறது உலகளவில் வெள்ளிக்கு மவுசு கூடுகிறது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கடன் வழங்குவதை விட, டிபாசிட் திரட்டுவதில் வங்கிகள் மும்முரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2014
00:38

மும்பை:வங்கிகள், உணவு சாரா துறைக்கு வழங்கும் கடனை விட, அதிக அளவில் டிபாசிட் திரட்டி வருகின்றன.
வளர்ச்சி:உதாரணமாக, சென்ற ஏப்ரல் 18ன் நிலவரப்படி, வங்கிகள் திரட்டிய டிபாசிட், கடந்த ஆண்டு, இதே காலத்தில் இருந்ததை விட, 14.84 சதவீதம் வளர்ச்சி கண்டு, 78,88,416 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதே காலத்தில், வங்கிகள், உணவு சாரா துறைக்கு வழங்கிய கடன், 14.35 சதவீதம் என்ற அளவிற்கே வளர்ச்சி கண்டு, 59,62,151 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், வங்கிகள் திரட்டிய டிமாண்ட் டிபாசிட், 16 சதவீதம் அதிகரித்து, 7,48,231 கோடியாகவும், குறித்த கால டிபாசிட், 14.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 71,40,184 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளன.
கடந்த, 2013ம் ஆண்டு, டிசம்பர் 13ம் தேதி வரையிலான இரு வாரங்களில், வங்கிகளின் டிபாசிட், அதிகபட்சமாக, 17 சதவீதம் வளர்ச்சி கண்டது.இதற்கு, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான, அன்னியச் செலாவணி டிபாசிட் பரிவர்த்தனை திட்டம், துணை புரிந்தது.அதன் பின், நடப்பாண்டில், வங்கிகளின் டிபாசிட் வளர்ச்சி, 15 சதவீதம் என்ற அளவிற்கு உள்ளது. வங்கிகள், அவ்வப்போது நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு முகாம்களை நடத்தி, டிபாசிட்டுகளை திரட்டி வருகின்றன.
அறிகுறி:அதேசமயம், தொழில்துறையில் காணப்படும் மந்தநிலையால், வங்கிகளின் உணவு சாரா கடன் வளர்ச்சி குறைந்துள்ளது.நடப்பு 2014–15ம் நிதியாண்டில், தொழில் துறை வளர்ச்சி காண்பதற்கான அறிகுறி தென்படுவதால், வரும் மாதங்களில், வங்கிகளின் உணவு சாரா கடன் நன்கு வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)