பதிவு செய்த நாள்
20 மே2014
04:02
புதுடில்லி : நடப்பாண்டின் முதல் காலாண்டில் (ஜன.,–மார்ச்), பிரின்டர் விற்பனை (ஏ 6 பிரின்டர் நீங்கலாக), 8.01 லட்சமாக வளர்ச்சி கண்டுள்ளது.இது, இதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், 1.5 சதவீதம் அதிகம் என, ஐ.டீ.சி., ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், அரசு அலுவலகங்களுக்கான லேசர் பிரின்டர் விற்பனை, 12.8 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், நுகர்வோரிடையே, இங்க்ஜெட் வகை பிரின்டர்களுக்கான தேவை குறைந்துள்ளதையடுத்து, இதன் விற்பனை, 1.5 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.கணக்கீட்டு காலாண்டில், ஒட்டு மொத்த பிரின்டர் விற்பனையில், எச்.பி., நிறுவனம், 48.3 சதவீத பங்களிப்பை கொண்டு முதலிடத்தில் உள்ளது.இதையடுத்து, கேனன் (16.4 சதவீதம்), எப்சன் (10.5 சதவீதம்), ரீகோ(5.7 சதவீதம்) மற்றும் சாம்சங் (5.3 சதவீதம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|