வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
குறைந்த வட்டியில் வெளிநாட்டு கடன் மோசடி :வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 மே2014
04:19
மும்பை : வெளிநாடுகளில், குறைந்த வட்டியில் கடன் பெற்று தருவதாக கூறும் மோசடி திட்டங்களில், வாடிக்கையாளர்கள் ஏமாறுவதை தடுக்க, வங்கிகள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.அண்மைக் காலமாக, குறைந்த வட்டியில், வெளிநாடுகளில் இருந்து கடன் பெறலாம் என, விளம்பரங்கள் வருவது அதிகரித்துள்ளது.பரிசு தொகை:மேலும், வெளிநாட்டு பரிசு போட்டியில், உங்கள் பெயர் தேர்வாகி உள்ளது என, கடிதம், மின்னஞ்சல், மொபைல்போன், குறுந்தகவல் போன்றவற்றின் மூலமாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பரிசுத் தொகையை பெற,அன்னியச் செலாவணி பரிமாற்றகட்டணம் அல்லது வரி செலுத்த வேண்டும் என்று கூறி, அதற்கான தொகையை, வங்கிக் கணக்கில் செலுத்துமாறு, மோசடி பேர்வழிகள் கூறுகின்றனர்.அதை நம்பி, அவர்கள் கூறும் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்திய பலர், பரிசு பணம் கிடைக்காமல், ஏமாற்றத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இதுதவிர, பணப் பட்டுவாடா திட்டம் என்ற பெயரில், பல மோசடி வலைதளங்கள் செயல்பட்டு வருகின்றன.இவற்றில், போலியான திட்டங்களின் கீழ், குறைந்த வட்டியில் வெளிநாட்டு கடன் கிடைக்கும் என, வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களை நம்பி, ஏராளமானோர் பணத்தை இழந்து வருகின்றனர். ரிசர்வ் வங்கி முத்திரை முதல், உயரதிகாரிகளின் கையொப்பம் வரை போலியாக உருவாக்கி, மோசடி வலைதளங்கள் அனுப்பும் கடிதங்களில், மக்கள் ஏமாறுகின்றனர்இது போன்ற மோசடிகள் குறித்து, ரிசர்வ் வங்கி, அவ்வப் போது விளம்பரங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வுபிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
விழிப்புணர்வு: இந்நிலையில், வங்கிகளும்,அவற்றின் வலைதளம், கிளைகள், ஏ.டி.எம்., மையங்கள் ஆகியவற்றில், மோசடி திட்டங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும் தகவல்களை வெளியிட வேண்டும் என, ரிசர்வ் வங்கி வலியுறுத்தி உள்ளது. மேலும், வங்கியில் பணம் செலுத்துவதற்கான பற்றுச் சீட்டில், எதற்காக அத்தொகை செலுத்தப்படுகிறது என்பதைகுறிக்க, இடம் ஒதுக்கலாம் எனவும், ரிசர்வ் வங்கி பரிந்துரைத்து உள்ளது.
தண்டனை:இந்த வசதி மூலம், மோசடி திட்டங்கள் குறித்து வங்கி அதிகாரிகள் எச்சரித்து, அது போன்ற திட்டங்களில், வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துவதை தடுக்க முடியும் என, கருதப்படுகிறது.இந்தியாவில் வசிக்கும் ஒருவர், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, வெளிநாடுகளில் இருந்து பரிசு தொகை பெறுவது, அதற்காக பணம் செலுத்துவது உள்ளிட்டவை, 'பெமா'சட்டப் பிரிவின் கீழ், தண்டனைக்குரியது என்பது, குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி முத்திரை முதல், உயரதிகாரிகளின் கையொப்பம் வரை போலியாக உருவாக்கி, மோசடி வலைதளங்கள் அனுப்பும் கடிதங்களில், மக்கள் ஏமாறுகின்றனர்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 20,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 20,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!