வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
காளையின் ஆதிக்கத்தில் பங்கு வர்த்தகம்'சென்செக்ஸ்' 241புள்ளிகள் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 மே2014
04:21
மும்பை : தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ., ஆட்சி அமைப்பதை முன்னிட்டு, பங்கு முதலீட்டாளர்களிடையே உற்சாகம் பெருக்கெடுத்துள்ளது.இதன் விளைவாக, கடந்த மூன்று வர்த்தக தினங்களில் மட்டும், 'சென்செக்ஸ்' மற்றும் 'நிப்டி', 2 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.மேலும், அன்னிய முதலீட்டு வரத்தும் அதிகரிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக, சென்ற வெள்ளியன்று மட்டும், அன்னிய நிதி நிறுவனங்கள், 3,635 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய வர்த்தகத்தில், மின்சாரம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டது.அதேசமயம், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்வால், மருந்து, ஐ.டி., நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 241.31 புள்ளிகள் அதிகரித்து, 24,363.05 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பெல், கோல் இந்தியா, என்.டி.பி.சி., உள்ளிட்ட, 19 நிறுவனப் பங்குகள், விலை உயர்வை கண்டன.அதேசமயம், டி.சி.எஸ்., இன்போசிஸ், சன்பார்மா, டாக்டர் ரெட்டீஸ் உள்ளிட்ட, 11 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 60.55 புள்ளிகள் உயர்ந்து, சாதனை அளவாக, 7,263.55 புள்ளிகளில் நிலைகொண்டது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 20,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 20,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!