இந்தியாவில் 4 மாதங்களில்2 கோடி பேர் விமான பயணம்இந்தியாவில் 4 மாதங்களில்2 கோடி பேர் விமான பயணம் ... கொளுத்தும் கோடையிலும் களை இழந்த 'ஏசி'  விற்பனை கொளுத்தும் கோடையிலும் களை இழந்த 'ஏசி' விற்பனை ...
மாம்பழத்தை தொடர்ந்து மூலிகை மருந்துக்கும் ஆபத்து: ஐரோப்பாவின் தடையால் திணறும் ஏற்றுமதியாளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2014
01:47

இந்தியா - ஐரோப்பிய நாடுகள் இடையிலான வர்த்தக உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் விரிவடைந்து கொண்டே போகிறது. பூச்சி மருந்து பிரச்னையில், இந்தியாவின் அல்போன்சா மாம்பழங்களின் இறக்குமதிக்கு, அண்மையில் ஐரோப்பிய கூட்டமைப்பு (இ.யு.,) தடை விதித்தது.

விசாரணை கமிஷன்: இதனால், அல்போன்சா மாம்பழம் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, மகாராஷ்டிர அரசு, விசாரணை கமிஷன் வைக்கும் அளவிற்கு, அதன் விலை வீழ்ச்சி கண்டது. இந்நிலையில், ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் தடையால், இந்தியாவின் மூலிகை மருந்துகளை, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து: இங்கிலாந்தின் மருந்துகள் மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம் (எம்.எச்.ஆர்.ஏ.,), பாரம்பரிய மூலிகைக்கான பதிவு (டி.எச்.ஆர்.,) அல்லது மருந்து உரிமை (பி.எல்.,) சான்றிதழ் பெறாத, அனைத்து ஆயுர்வேத, மூலிகை மருந்துகளின் இறக்குமதிக்கு தடை விதித்து உள்ளது.நடப்பு மே 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள தடையால், ஐரோப்பிய நாடுகளில் உள்ள மருந்து கடைகள், மேற்கண்ட சான்றிதழ் இல்லாத மூலிகை மருந்துகளின் விற்பனையை நிறுத்தி வருகின்றன. இத்துடன் தடை செய்யப்பட்ட மூலிகை மருந்துகளின் பட்டியலும் எம்.எச்.ஆர்.ஏ., வலை தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த மருந்துகளை யாரும் வாங்க வேண்டாம் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், ஆஸ்துமா நிவாரணியான, இந்தியாவின் 'சுவாச சஞ்சீவனி' உள்ளிட்ட பல்வேறு மருந்துகள் இடம் பெற்றுள்ளன.

கண்டனம்: ஐரோப்பாவின் இந்த நடவடிக்கைக்கு, இந்தியாவின், ஆயுர்வேத மருந்து தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு (ஏ.டீ.எம்.ஏ.,) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இப்பிரச்னைக்கு உடனே தீர்வு காணாவிட்டால், 850 கோடி ரூபாய் மதிப்பிலான மூலிகை மற்றும் ஆயுர்வேத மருந்து ஏற்றுமதி பாதிக்கப்படும் என, மத்திய வர்த்தக அமைச்சகத்திடம் கூறியுள்ளது.

கட்டணம்: ஒரு மூலிகை மருந்துக்கான பதிவுக் கட்டணம், 8 லட்சம் முதல் 45 லட்சம் ரூபாய் வரை, மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்திய நிறுவனங்கள், இக்கட்டணத்தை செலுத்தி, மருந்துகளை பதிவு செய்யாமல் உள்ளன.
இத்துடன், ஐரோப்பாவில், 15 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள மருந்துகளுக்கே, சான்றிதழ் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும், இந்திய மூலிகை மருந்து ஏற்றுமதியாளர்களுக்கு, கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது.

இதுகுறித்து, ஏ.டீ.எம்.ஏ., பொருளாளர் சசாங் சாந்து கூறியதாவது: பதிவு செய்த மருந்துகளின் உரிமம், எத்தனை ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்பது தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும், இந்த அளவிற்கு பெரிய தொகையை செலுத்துவது இயலாத காரியம். அப்படியே செலுத்தினாலும், அதை திரும்ப வழங்க வேண்டும் அல்லது மானியமாவது அளிக்க வேண்டும் என, வர்த்தக அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவின் அதிர்ச்சி 'ரிப்போர்ட்':கடந்த ஆண்டுகளில், உலோகம் அல்லது நச்சுக் கலவைகள் காரணமாக, இங்கிலாந்தில், இந்திய ஆயுர்வேத மருந்துகள் பலவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தாபர், ஜண்டு, பத்யநாத், இமாலயா ஆகிய நிறுவனங்களின் 14 மருந்துகளில், ஈயம், பாதரசம், ஆர்சனிக் பொருட்கள் தீங்கு விளைவிக்கக் கூடிய அளவிற்கு உள்ளதாக, அமெரிக்க மருந்து கூட்டமைப்பு, அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)