வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வர்த்தகத்தில் விறுவிறுப்பு குறைவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 மே2014
01:49
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் நேற்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.பல முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்திருந்ததை சாதகமாக்கி, முதலீட்டாளர்கள், லாப நோக்குடன் செயல்பட்டதால், வர்த்தகம் சிறிய ஏற்றத்துடன் முடிவடைந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வியாபாரம் மந்தமாக இருந்தது. நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டது.
அதேசமயம், வங்கி, எண்ணெய், எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 13.83 புள்ளிகள் அதிகரித்து, 24,376.88 புள்ளிகளில் நிலைகொண்டது.
'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், சேசா ஸ்டெர்லைட், பெல், மகிந்திரா உள்ளிட்ட, 17 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், கோல் இந்தியா, ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் உள்ளிட்ட, 13 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 11.95 புள்ளிகள் உயர்ந்து, 7,275.50 புள்ளிகளில் நிலைபெற்றது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 21,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 21,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!