பதிவு செய்த நாள்
21 மே2014
10:09
மும்பை : மத்தியில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால் கடந்த 5 நாட்களாக ஏற்றத்தில் இருந்த இந்திய பங்குசந்தைகள் இன்று(மே 21ம் தேதி) சரிவை சந்தித்து உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 46.88 புள்ளிகள் சரிந்து 24,330 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 12.80 புள்ளிகள் சரிந்து 7,262.70 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.
முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்து வருவதாலும், எண்ணெய், எரிவாயு, வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை சரிந்ததாலும், உலகளவில் பங்குசந்தைகளில் காணப்படும் சுணக்கத்தாலும் இந்திய பங்குசந்தைகளில் சரிவு காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.52 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 0.75 சதவீதமும் சரிந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|