பதிவு செய்த நாள்
21 மே2014
17:46
மும்பை : ஆட்சி மாற்றத்தால் கடந்த நான்கு நாட்களாக ஏற்றத்தில் இருந்த இந்திய பங்குசந்தைகள் இன்று(மே 21ம் தேதி) துவங்கும் போதே சரிவுடன் துவங்கி இறுதியில் சரிவுடனேயே முடிந்தன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட சரிவாலும், லாபநோக்கோடு முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை விற்பனை செய்ததாலும், எண்ணெய், எரிவாயு, வங்கி மற்றும் முதலீட்டு தொடர்பான பங்குகள் விலை சரிந்ததாலும் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க சரிவிலேயே முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 78.86 புள்ளிகள் சரிந்து 24,298.02-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 22.60 புள்ளிகள் சரிந்து 7,252.90-ஆகவும் முடிந்தன. முன்னதாக கடந்த நான்கு நாட்களில் சென்செக்ஸ் 562 புள்ளிகள் உயர்ந்து இருந்தது.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கெயில், எல் அண்ட் டி., பெல், மாருதி சுசூகி, எஸ்பிஐ., ஐசிஐசிஐ., ஆக்சிஸ், எச்டிஎப்சி., ஹீரோ மோட்டோ கார்ப், சன்பார்மா, பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், டாடா பவர், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட 21 நிறுவன பங்குகள் விலை சரிவில் முடிந்தன. அதேசமயம் ஐடி தொடர்பான பங்குகள் விலை ஏற்றத்தில் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|