பதிவு செய்த நாள்
22 மே2014
01:44
மும்பை: சாதகமற்ற சர்வதேச நிலவரம் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்றவற்றால், நேற்று, பங்கு வியாபாரம் சரிவுடன் முடிவடைந்தது.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 78.86 புள்ளிகள் சரிவடைந்து, 24,298.02 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், எஸ்.பி.ஐ., ஆக்சிஸ் பேங்க், எல் அண்டு டி உள்ளிட்ட, 21 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், பஜாஜ் ஆட்டோ, ஹிண்டால்கோ உள்ளிட்ட, ஒன்பது நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி 22.60 புள்ளிகள் குறைந்து, 7,252.90 புள்ளிகளில் நிலைபெற்றது. நேற்றைய வியாபாரத்தில், அன்னிய மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்கள் நிகர அளவில், முறையே, 266 கோடி மற்றும் 439 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|