பதிவு செய்த நாள்
22 மே2014
01:54
மும்பை:வாடிக்கையாளர் சேவையில் சிறந்து விளங்கும் வங்கிகளுக்கான தரக் குறியீட்டை, வரும் ஆண்டு முதல் வெளிப்படையாக அறிவிக்க, இந்திய வங்கிகள் தரம் மதிப்பீட்டு வாரியம் (பீ.சி.எஸ்.பீ.ஐ.,), முடிவு செய்துஉள்ளது.
குறியீடு:இந்த அமைப்பு, ஐந்து அம்சங்களின் அடிப்படையில், வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை சார்ந்த செயல்பாடுகளை ஆராய்ந்து, தரக் குறியீட்டை வழங்கி வருகிறது.இதன்படி, தகவல்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்லுதல், வெளிப்படையான நடைமுறை, வாடிக்கையாளரை மையமாக கொண்ட செயல்பாடு, குறை தீர்ப்பு நடவடிக்கை, வாடிக்கையாளரின் பின்னுாட்ட தகவல் பராமரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இந்த வகையில், 69 நகரங்களில் செயல்படும், 48 வங்கிகளின், 3,000 கிளைகள் மற்றும் 6,000 வாடிக்கையாளர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விழிப்புணர்வு:இந்த ஆய்வில், 5 வங்கிகள் மட்டுமே, வாடிக்கையாளர் சேவையில், சிறப்பான செயல்பாட்டிற்காக, அதிக புள்ளிகளை பெற்றுள்ளன.25 வங்கிகள், சராசரிக்கு மேலாகவும், 17 வங்கிகள் சராசரியான செயல்பாட்டிற்கான தரக் குறியீட்டினை பெற்றுள்ளன. ஒரு வங்கியின் சேவை, சராசரிக்கும் குறைவாக உள்ளது.இதுவரை, இதுபோன்ற தரக்குறியீட்டு பட்டியல், வங்கிகளிடையே மட்டும் பரிமாறிக் கொள்ளப்பட்டு வந்தது.
வரும், 2015ம் ஆண்டு முதல், வங்கிகளின் தரக் குறியீட்டு பட்டியல், பொதுமக்கள் அறியும் வகையில், வெளிப்படையாக வெளியிடப்படும்.இது, வங்கி வாடிக்கையாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதுடன், வங்கிச் சேவையின் தரம் உயரவும் வழி வகுக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|