ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ... ரூபாயின் மதிப்பில் முன்னேற்றம் - ரூ.58.46 ரூபாயின் மதிப்பில் முன்னேற்றம் - ரூ.58.46 ...
வேலைவாய்ப்பை பெருக்குவதில் தமிழக அரசு தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2014
01:57

தமிழக அரசு, தமிழகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான முயற்சியை முடுக்கி விட்டுள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு வழங்குவதில், குறு, சிறு, நடுத்தர தொழில் துறை இரண்டாவது இடத்தில் உள்ளது.
இளைஞர்கள்:இதை கருத்தில் கொண்டு, மேற்கண்ட துறைகளில் தொழில் முனைவோர் களை ஈர்த்து, வேலைவாய்ப்பை பெருக்க, கவர்ச்சிகரமான சலுகை திட்டங்களை தமிழக அரசு அறிவித்து உள்ளது.இதன்படி, புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேலாண்மை திட்டத்தின் (நீட்) கீழ், படித்த இளைஞர்கள், சுயதொழில் துவங்க, மானியத்துடன், குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ்,ஒருவர்,சொந்தமாக தொழில்துவங்க, 3 சதவீத வட்டியில்,ஒரு கோடிரூபாய் வரை கடன் பெறலாம். இதில், 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.கடந்த, 2012 – 13ம் நிதி யாண்டு முதல், மேற்கண்ட திட்டத்தின் கீழ், 307 கோடி ரூபாய் கடன் மற்றும் 46.57 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
வேலையற்ற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், தொழில் துவங்க, 41.48 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 16,189 பேர் பயன் பெற்றுள்ளனர். 13,776 பேருக்கு, 49.45 கோடி ரூபாய் மானிய உதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 1,61,732 குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழில்களை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், தொழில் அடிப்படை கட்டமைப்பு நிதியம் (ஐ.ஐ.எப்.,) ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதன் நிதியுதவியுடன், தமிழ்நாடு மாநில தொழிற்சாலைகள் மேம்பாட்டு கழகம் (சிப்காட்) அமைக்கும் தொழிற் பூங்காவில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், 12 மாவட்டங்களில், 20 தொழிற்பூங்காக்கள் அமைப்பதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. புதிய தொழிற்பூங்காக்களை உருவாக்க, 840 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், இயந்திர தளவாடங்கள் வாங்கு வதற்காக வழங்கப்படும், மூலதன மானியத்தை, தமிழக அரசு, 15 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக, உயர்த்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், 160.66 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டு உள்ளது.
தொழிற்பூங்கா:மின் தட்டுப்பாட்டை சமாளிக்க, ‘ஜெனரேட்டர்’ வாங்குவதற்கு பெறும் கடனில், தொழில் முனைவோரின் பங்களிப்பு, 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 180 பேர் பயன் பெற்றுள்ளனர்.குறைந்த வட்டி, மானியத்துடன் கடன் வசதி, புதிய தொழிற்பூங்காக்கள் உருவாக்கம் என, பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக, வேலை வாய்ப்பு களை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)