பதிவு செய்த நாள்
22 மே2014
17:07
மும்பை : வாரத்தின் நான்காம் நாளில் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன. நிப்டி புதிய உச்சத்தை தொட்டன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றத்தாலும், தங்கம் மீதான இறக்குமதி வரியில் ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ள சில தளர்வுகளால் அது சம்பந்தப்பட்ட பங்குகள் விலை உயர்ந்ததாலும், நுகர்வோர் தொடர்பான பங்குகள் விலை நிலையாக இருந்தாலும் இந்திய பங்குசந்தைகள் இன்று ஏற்றத்தில் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 76.38 புள்ளிகள் உயர்ந்து 24,374.40-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 23.50 புள்ளிகள் உயர்ந்து 7,276.40எனும் புதிய உச்சத்தையும் தொட்டன. முன்னதாக மே 20ம் தேதி நிப்டி அதிகப்பட்சமாக 7,275.50ஆக இருந்ததே உச்சமாக இருந்தது.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் அநேக பங்குகள் விலை ஏற்றத்தில் முடிந்தன. அதிலும் குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில் தங்கம் தொடர்பான நிறுவன பங்குகளான டைட்டன், கீதாஞ்சலி, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை நல்ல ஏற்றம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|