பதிவு செய்த நாள்
23 மே2014
02:01
புதுடில்லி:சர்க்கரை உற்பத்தி, மந்தகதியில் உள்ளதால், நடப்பு பருவத்தில், எதிர்பார்த்த அளவு எட்டப்படுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.நடப்பு 2013 – 14ம் பருவத்தில் (அக்., – செப்.,) மே 15ம் தேதி வரையிலுமாக, நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 3.23 சதவீதம் சரிவடைந்து, 2.39 கோடி டன்னாகக் குறைந்துள்ளது.
முந்தைய பருவத்தின் இதே காலத்தில், சர்க்கரை உற்பத்தி, 2.47 கோடி டன்னாக அதிகரித்து காணப்பட்டது என, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், மகாராஷ்டிரா, 77 லட்சம் டன் சர்க்கரையை உற்பத்தி செய்து, முதலிடத்தில் உள்ளது.இதையடுத்து, உத்தர பிரதேசம் (64.50 லட்சம் டன்), கர்நாடகா (41 லட்சம் டன்), தமிழகம் (11.50 லட்சம் டன்) உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.நடப்பு பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.42 கோடி டன்னாக இருக்கும் என, ‘இஸ்மா’ மதிப்பீடு செய்துள்ளது.எனினும், இது, கடந்த பருவ உற்பத்தியுடன் (2.51 கோடி டன்) ஒப்பிடுகையில், 4 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|