பதிவு செய்த நாள்
23 மே2014
02:05
புதுடில்லி:நடப்பு 2014–15ம் நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2.3 சதவீதம் என்ற அளவில் உயர வாய்ப்புள்ளதாக, சிட்டிகுரூப் தெரிவித்துஉள்ளது.மத்தியில் அமைய உள்ள புதிய அரசு, இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிப்பதில் தீவிரம் காட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 2.3 சதவீதம் என்ற அளவில் கட்டுக்குள் இருக்கும் என, தெரிகிறது.
எனினும், இது, சென்ற 2013–14ம் நிதியாண்டிற்கு மதிப்பிடப்பட்டுள்ள, நடப்பு கணக்கு பற்றாக்குறை (3,600 கோடி டாலர் அல்லது 2 சதவீதம்) அளவை காட்டிலும், சற்று அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.6 சதவீதமாகவும், 2015–16ல், 6.5 சதவீதமாகவும் உயரும் என, சிட்டிகுரூப் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|