பதிவு செய்த நாள்
23 மே2014
02:07
மும்பை:ஏர்–இந்தியா நிறுவனம், 450 கோடி நிலுவை வைத்துள்ளதால், இனி விமான போக்குவரத்து சார்ந்த செலவை, ரொக்கத்தில் தான் செலுத்த வேண்டும் என, மும்பை சர்வதேச விமான நிறுவனம் (எம்.ஐ.ஏ.எல்.,), தெரிவித்துள்ளது.
மேற்கண்ட தொகையில், குறைந்தபட்சம் 200 கோடி ரூபாய் வழங்கினால் தான், ரொக்கப் பிரிவில் இருந்து, பழைய நிலைக்கு மாற்ற முடியும் என, எம்.ஐ.ஏ.எல்., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏர்–இந்தியா நிறுவனம், பன்னாட்டு விமான சேவைக்கான மதிப்புமிக்க, 'ஸ்டார் அலையன்ஸ்' பட்டியலில் இடம் பெற உள்ள நிலையில், மேற்கண்ட இடர்பாட்டை சந்தித்துள்ளது.டெல்லி பன்னாட்டு விமான நிலைய நிறுவனத்திற்கு, நிலுவை உள்ள நிலையிலும், அன்றாட செலவினங்களுக்கான தொகையை, ஏர்–இந்தியா வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|