பதிவு செய்த நாள்
23 மே2014
02:08
புதுடில்லி:சர்வதேச தேயிலை உற்பத்தியில், இந்தியா, தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.சென்ற 2013–14ம் நிதியாண்டில், இந்தியாவின் தேயிலை உற்பத்தி, 8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 122.44 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது.இதற்கு முந்தைய 2012–13ம் நிதியாண்டில், இதன் உற்பத்தி, 113.51 கோடி கிலோவாக இருந்தது என, இந்திய தேயிலை வாரியத்தின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு நிதியாண்டில், அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் தேயிலை உற்பத்தி, 6.52 சதவீதம் உயர்ந்து, 92 கோடி கிலோவிலிருந்து, 98 கோடி கிலோவாக வளர்ச்சி கண்டுள்ளது.இந்தியாவின் மொத்த தேயிலை உற்பத்தியில், மேற்கண்ட இரண்டு மாநிலங்களின் பங்களிப்பு மட்டும், 80 சதவீத அளவிற்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தென் மாநிலங்களான, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் இதன் உறபத்தி, 13 சதவீதம் வளர்ச்சி அதிகரித்து, 24.45 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|