பதிவு செய்த நாள்
23 மே2014
02:10
மும்பை:சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்தது மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன், பங்குகளில் முதலீடு மேற்கொண்டது போன்றவற்றால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.
ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.நேற்றைய வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம் தவிர்த்து, இதர துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டது.குறிப்பாக, நுகர்வோர் சாதனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை முறையே, 6.78 சதவீதம் மற்றும் 5.54 சதவீதம் அதிகரித்திருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 76.38 புள்ளிகள் அதிகரித்து, 24,374.40 புள்ளிகளில் நிலைகொண்டது.
‘சென்செக்ஸ் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், என்.டி.பி.சி., கோல் இந்தியா உள்ளிட்ட, 17 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், ஹிண்டால்கோ, பெல் உள்ளிட்ட, 13 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘நிப்டி’, 23.50 புள்ளிகள் உயர்ந்து, 7,276.40 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|