பதிவு செய்த நாள்
23 மே2014
02:11
மும்பை:பார்வையற்றோரும், ஏ.டி.எம்., களை பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதி விரைவில் அமலாக உள்ளது.வங்கிகள், வரும் ஜூலை மாதம் முதல் அமைக்கும் அனைத்து ஏ.டி.எம்., களும், பார்வையற்றோரும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
புதிய ஏ.டி.எம்.,களில், குரல்வழி தகவல் மற்றும் 'பிரெய்லி கீ பேடு' வசதிகள் இருக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.மாற்று திறனாளிகளும் பயன்படுத்த ஏதுவாக, வங்கி கிளைகள் மற்றும் ஏ.டி.எம்.,களை, வங்கிகள் உருவாக்க வேண்டும் என, கடந்த 2009ம் ஆண்டே, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது.இதனடிப்படையில் ஜூலை 1ம் தேதி முதல், நிறுவப்படும் ஏ.டி.எம்.,களில், மேற்கண்ட வசதிகள் இருக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம்.,களிலும் இந்த வசதியை உருவாக்கும் வகையில், செயல்திட்டம் ஒன்றை உருவாக்க, ரிசர்வ் வங்கி கேட்டு கொண்டுஉள்ளது.மாற்று திறனாளி கள், முதியோர்களின் நலனை கருத்தில் கொண்டு, புதிய மற்றும் பழைய ஏ.டி.எம்., மையங்க ளில் சாய்வு தள வசதியை ஏற்படுத்த வேண்டும் எனவும், ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|