பதிவு செய்த நாள்
23 மே2014
02:13
புதுடில்லி:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சார்ந்த அனைத்து கோரிக்கைக்கும், 20 நாட்களுக்குள் தீர்வு காணுமாறு, அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது, வருங்கால வைப்பு நிதி கணக்கை முடிப்பது, ஓய்வூதியம் பெறுவது உள்ளிட்டவை சார்ந்த விண்ணப்பங்களுக்கு, ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்படுகிறது.இது, நடப்பு 2014–15ம் நிதியாண்டு முதல், 20 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக, 120க்கும் மேற்பட்ட மண்டல அலுவலகங்களுக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் (இ.பி.எப்.ஓ.,) அறிக்கை அனுப்பிஉள்ளது.
ஜலான் குழுவின் பரிந்துரைப்படி, இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடந்த, 2013–14ம் நிதியாண்டில், 1.20 கோடி உறுப்பினர்களின் கணக்கு முடிப்பு, ஓய்வூதியம்உள்ளிட்டவை தொடர்பான, கோரிக்கைகளுக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் தீர்வு கண்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டை விட, 13 சதவீதம் வளர்ச்சியாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|