பதிவு செய்த நாள்
23 மே2014
02:16
புதுடில்லி:சென்ற 2013–14ம் நிதியாண்டில், இந்தியாவில் 1.46 லட்சம் கோடி ரூபாய் (2,430 கோடி டாலர்) அளவிற்கு, அன்னிய நேரடி முதலீடு குவிந்துள்ளது.
இது, 2012–13ம் நிதியாண்டில், 1.34 லட்சம் கோடி ரூபாயாக (2,240 கோடி டாலர்) இருந்தது.ஆக, மதிப்பீட்டு நிதியாண்டில், இந்தியாவில், அன்னிய நேரடி முதலீடு, 8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் (டீ.ஐ.பி.பி.,) தெரிவித்துள்ளது.நடப்பாண்டு மார்ச் மாதத்தில், அன்னிய நேரடி முதலீடு, கடந்த ஆண்டு இதே மாதத்தை விட, இரு மடங்கு அதிகரித்து, 9,120 கோடியில் இருந்து, 21,180 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.கணக்கீட்டு நிதியாண்டில், அதிகபட்சமாக சேவை துறையில் அன்னிய நேரடி முதலீடு, 13,320 கோடி ரூபாய் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடுத்து, மோட்டார் வாகனம் (9,060 கோடி ரூபாய்), தொலைத்தொடர்பு (7,800 கோடி ரூபாய்), மருந்து (7,620 கோடி ரூபாய்), கட்டுமான மேம்பாடு (7,320 கோடி ரூபாய் ) உள்ளிட்ட துறைகள் உள்ளன.மதிப்பீட்டு நிதியாண்டில், அன்னிய நேரடி முதலீடு மேற்கொண்ட நாடுகளில், சிங்கப்பூர் (35,880 கோடி ரூபாய்) முதலிடத்தில் உள்ளது.இதையடுத்து, மொரீஷியஸ் (29,100 கோடி ரூபாய்), இங்கிலாந்து (19,260 கோடி ரூபாய்), நெதர்லாந்து (13,620 கோடி ரூபாய்) ஆகிய நாடுகள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|