பதிவு செய்த நாள்
23 மே2014
17:25
மும்பை : வாரத்தின் கடைசிநாளில் பங்குசந்தைகள் நல்ல உயர்வுடன் முடிந்தன, சென்செக்ஸ் 300 புள்ளிகளும், நிப்டி 90 புள்ளிகளும் உயர்வுடன் முடிந்தன. மத்தியில் ஏற்பட்டு இருக்கும் ஆட்சி மாற்றத்தால் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் உள்ளன. இதனால் முக்கிய துறை பங்குகள் அதிரடியாக உயர்ந்தன. குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில் எஸ்பிஐ., பங்குகள் விலை 10 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. இதனால் நாள் முழுக்க இன்றைய வர்த்தகம் ஏற்றத்திலேயே முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 319 புள்ளிகள் உயர்ந்து 24,693.35-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 90.70 புள்ளிகள் உயர்ந்து 7,367.10-ஆகவும் முடிந்தன. முன்னதாக 7,276.40 எனும் சாதனை நிப்டி இன்று முறியடித்தது.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி., எல்அண்ட்டி., எச்டிஎப்சி., உள்ளிட்ட 22 நிறுவன பங்குகள் விலை உயர்வுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|