பதிவு செய்த நாள்
26 மே2014
00:28
புதுடில்லி:சென்ற மார்ச் மாதத்தில், உள்நாட்டில், 21,232 கோடி ரூபாய் மதிப்பிற்கு, கனிமங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என, மத்திய கனிமவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கனிமங்கள் பிரிவில் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ள, நிலக்கரி உற்பத்தி, மதிப்பீட்டு மாதத்தில், 0.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 654 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இதன் மதிப்பு, 8,325 கோடி ரூபாயாகும்.அதே சமயம், கச்சா பெட்ரோலியம் உற்பத்தி, மைனஸ் 1.6 சதவீதம் பின்னடைவை கண்டு, 32 லட்சம் டன்னாக குறைந்துஉள்ளது. இதன் மதிப்பு, 5,795 கோடி ரூபாயாகும்.கணக்கீட்டு மாதத்தில், இரும்புத்தாது உற்பத்தி, 23 சதவீதம் வளர்ச்சி கண்டு, 146 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு, 3,024 கோடி ரூபாயாக உள்ளது.
பயன்பாட்டிற்கான எரிவாயு உற்பத்தி, 10.2 சதவீதம் சரிவடைந்து, 279.4 கோடி கனமீட்டராக குறைந்துள்ளது. இதன் மதிப்பு, 1,789 கோடி ரூபாயாகும்.இதே போன்று, பழுப்பு நிலக்கரி உற்பத்தியும், 10.3 சதவீதம் குறைந்து, 49 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது. இதன் மதிப்பு, 624 கோடி ரூபாயாகும். மேலும், சென்ற மார்ச்சில், சுண்ணாம்புக்கல் உற்பத்தியும், 3.2 சதவீதம் சரிவடைந்து, 255 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இதன் மதிப்பு, 527 கோடி ரூபாயாக உள்ளது.மொத்த உற்பத்தி மதிப்பில், மேற்கண்ட 6 கனிமங்களின் பங்களிப்பு மட்டும், 94 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|