பதிவு செய்த நாள்
26 மே2014
17:39
மும்பை : வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குசந்தைகள் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. தேர்தலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றன. இதனால் இந்திய பங்குசந்தைகள் தினம் ஒரு புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன. இன்று(மே 26ம் தேதி) சென்செக்ஸ் 25 ஆயிரம் புள்ளிகளை தாண்டியும், நிப்டி 7500 புள்ளிகளை கடந்தும் வர்த்தமாகின. ஆனால் இந்த உச்சம் இறுதிவரை நீடிக்கவில்லை. மதியத்திற்கு மேல் முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு அதிகளவு பங்குகளை விற்க தொடங்கினர். இதனால் இறுதியில் பங்குசந்தைகள் சரிந்தன. இருப்பினும் சென்செக்ஸ் சிறிய ஏற்றத்துடனும், நிப்டி சிறிய சரிவுடனும் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 23.53 புள்ளிகள் உயர்ந்து 24,716.88-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 8.05 புள்ளிகள் சரிந்து 7,359.05-ஆகவும் முடிந்தன. முன்னதாக வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் அதிகபட்சமாக 25,175.22 வரையிலும், நிப்டி 7,504 புள்ளிகள் வரையிலும் சென்றன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் பெல், டாடா பவர், கெயில் உள்ளிட்ட 18 நிறுவன பங்குகள் விலை சரிந்தும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, விப்ரோ உள்ளிட்ட 12 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|