பதிவு செய்த நாள்
27 மே2014
17:33

மும்பை : முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்ததால், இந்திய பங்குசந்தைகள் நாள் முழுக்க இன்று(மே 27ம் தேதி) சரிவுடனேயே முடிந்தன. கடந்த மூன்று நாட்களில் இந்திய பங்குசந்தைகள் 419 புள்ளிகள் ஏற்றம் பெற்று இருந்த நிலையில், எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட முக்கிய நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்தால் பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 167.37 புள்ளிகள் சரிந்து 24,549.51-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 41.05 புள்ளிகள் சரிந்து 7318 புள்ளிகளாகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கெயில், எஸ்பிஐ., எச்டிஎப்சி., ஆக்சிஸ், ஐசிஐசிஐ., டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா உள்ளிட்ட 21 நிறுவன பங்குகள் விலை சரிவில் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|