பதிவு செய்த நாள்
28 மே2014
01:08
புதுடில்லி ;சர்க்கரை மீதான இறக்குமதி வரியை, 15லிருந்து, 40 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, மத்திய அரசுக்கு, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) கோரிக்கை விடுத்து உள்ளது.சர்க்கரை இறக்குமதி அதிகரித்தால், உள்நாட்டில், அதன் விலை மேலும் வீழ்ச்சி காணும். இதை தடுக்கும் நோக்கில், சர்க்கரை இறக்குமதி மீதான வரியை, 40 சதவீதமாக உயர்த்த வேண்டும்.மேலும், இத்துறையின் வளர்ச்சிக்கு, நிலையான கொள்கை திட்டங்களையும் அறிவிக்க வேண்டும்.
இதனால், சர்க்கரை ஆலைகள் மட்டுமின்றி, 5 கோடி விவசாயிகளும் பயன்பெறுவர் என, இஸ்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.நடப்பு சந்தைப் பருவத்தில் (அக்., – செப்.,), நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.42 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த பருவத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியுடன் (2.51 கோடி டன்) ஒப்பிடும் போது, 4 சதவீதம் குறைவாகும்.நடப்பு மே மாதம் 15ம் தேதி வரை, 2.39 கோடி டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.உள்நாட்டில், சர்க்கரை பயன்பாடு, ஆண்டுக்கு, 2.30 – 2.35 கோடி டன் என்ற அளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|