பதிவு செய்த நாள்
28 மே2014
01:10
மும்பை:சாதகமான சர்வதேச சூழலிலும், நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று வீழ்ச்சி கண்டது.இதற்கு, பல நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருந்ததை, முதலீட்டாளர்கள் சாதகமாக பயன்படுத்தி, லாப நோக்குடன் விற்பனை செய்ததை அடுத்து, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ முறையே, 0.68 சதவீதம் மற்றும் 0.56 சதவீத சரிவுடன் முடிவடைந்தன.அதேசமயம், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது.
நேற்றைய வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருந்து தவிர்த்த, இதர துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 167.37 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 24,549.51 புள்ளிகளில் நிலைபெற்றது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், கெயில், எஸ்.பீ.ஐ., பெல், மகிந்திரா உள்ளிட்ட, 21 நிறுவனப் பங்குகளின் விலை சரிவை கண்டது.அதேசமயம், டாட்டா ஸ்டீல், எல் அண்டு டி, இன்போசிஸ் உள்ளிட்ட, 9 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்துஇருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 41.05 புள்ளிகள் சரிவடைந்து, 7,318 புள்ளிகளில் நிலைகொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|