தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.312 சரிவு ... ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 குறைவு ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 குறைவு ...
அன்னிய முதலீட்டுக்கு அனுமதியில்லை: நிர்மலா சீதாராமன் திட்டவட்ட அறிவிப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2014
14:44

புதுடில்லி: ''பல்பொருள் சில்லரை விற்பனையில், அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் பேச்சுக்கே இடமில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்தினால், சிறு வியாபாரிகள், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்,'' என, மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், திட்டவட்டமாக கூறியுள்ளார்.
நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசில், வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராக, தமிழகத்தின் திருச்சியில் பிறந்த நிர்மலா சீதாராமன் பதவியேற்றுள்ளார். நேற்று காலை, வர்த்தக அமைச்சக அலுவலகத்துக்கு வந்த நிர்மலாவுக்கு, அமைச்சக அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். இதன்பின், அமைச்சர் பொறுப்புகளை அவர் ஏற்றார்.
இதையடுத்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: பல்பொருள் சில்லரை விற்பனையில், அன்னிய முதலீட்டை அனுமதிப்பது இல்லை என்பது, பா.ஜ.,வின் திட்டவட்டமான நிலைப்பாடு. எதிர்க்கட்சியாக இருக்கும் போதே, இதை வலியுறுத்தியுள்ளோம். தற்போது ஆளும் கட்சியாக மாறியபின், இந்த நிலையில் மாற்றம் இருக்குமா என, கேட்கப்படுகிறது. கண்டிப்பாக மாற்றம் இருக்காது. இந்த திட்டத்தை அமல்படுத்தினால், சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், நாட்டின் முக்கிய நகரங்களிலும், சிறிய நகரங்களிலும், ஏராளமான பல்பொருள் அங்காடியை திறப்பதற்கு அனுமதி அளித்தால், உள்நாட்டு சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே, இந்த விவகாரத்தில், பா.ஜ.,வின் நிலையில் மாற்றம் ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
பா.ஜ., தேர்தல் அறிக்கையில், பல்பொருள் சில்லரை விற்பனை துறை தவிர, மற்ற துறைகளில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது குறித்து ஆலோசிப்போம் என, கூறப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன், விரிவாக ஆலோசிக்க திட்டமிட்டுள்ளேன். ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு, இந்த அரசு முன்னுரிமை அளிக்கும். அனைத்து நாடுகளுடனும், சுமுகமான வர்த்தக உறவை ஏற்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
காங்., அரசு: முந்தைய காங்., தலைமையிலான அரசு, பல்பொருள் சில்லரை விற்பனையில், அன்னிய முதலீட்டை அனுமதித்தது. ஆனாலும், பிரிட்டனை சேர்ந்த டெஸ்கோ என்ற நிறுவனத்துக்கு மட்டுமே, இதற்கான அனுமதியை முந்தைய அரசு அளித்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)