பதிவு செய்த நாள்
28 மே2014
14:57
திண்டுக்கல்: மழையால், திண்டுக்கல் மார்க்கெட்டில், வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. திருப்பூர், தாராபுரம், ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து, தினமும், 150 டன் சின்ன வெங்காயமும், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா மாநிலங்களில் இருந்து, தினமும், 160 டன் பெரிய வெங்காயமும், திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருகின்றன. இங்கிருந்து, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கும், வெங்காயம் ஏற்றுமதியாகின்றன.
தற்போது, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு வரும் வெங்காயத்தில் பாதி, அழுகி விடுகிறது. அவற்றை வியாபாரிகள், கழிவுகளாக ஒதுக்கி விடுவதால், விலை உயர்ந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன், கிலோ, 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம், 18 ரூபாய்க்கும், 16 ரூபாய்க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம், 22 ரூபாய்க்கும், விற்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதால், வெங்காயத்தின் விலை, மேலும், உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|