பதிவு செய்த நாள்
29 மே2014
00:21
புதுடில்லி:ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுப்பவர்கள், கண்டிப்பாக வங்கி கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும் என்ற நடைமுறை, சென்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி, புதிதாக ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் இணைவோர், தங்கள் வங்கி கணக்கை தெரிவிக்க வேண்டும். காப்பீடு முதிர்வடையும் போது, அந்த வங்கி கணக்கில், காப்பீட்டு தொகை வரவு வைக்கப்படும்.ஏற்கனவே ஆயுள் காப்பீடு செய்திருப்போர், வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள், வங்கி கணக்கு விவரங்களை, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிடம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கிராமப்புறங்களில், வங்கி கணக்கு இல்லாதவர்கள், ஆயுள் காப்பீடு எடுக்க, மேற்கண்ட விதிமுறைகள் தடையாக இருக்கும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்து உள்ளனர். அதனால், புதிய விதிமுறையை தளர்த்த வேண்டும் என, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், ‘இரிடாவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|