பதிவு செய்த நாள்
29 மே2014
10:37
மும்பை : வாரத்தின் நான்காம் நாளில் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மே 29ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண், 77.78 புள்ளிகள் சரிந்து 24,478.31-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 13.25 புள்ளிகள் சரிந்து 7,316.40-ஆகவும் இருந்தன.
ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் சரிவு காரணமாகவும், முக்கிய நிறுவன பங்குகளின் விலை சரிவாலும், குறிப்பாக இன்போசிஸ் தலைவர் ஸ்ரீனிவாசன் ராஜினாமா செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து, அந்நிறுவன பங்குகள் 6 சதவீதம் சரிந்ததால் பங்குசந்தைகளில் சரிவு காணப்படுகின்றன.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து, ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஜப்பானின் நிக்கி 0.58 சதவீதம் சரிந்தும், ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.22 சதவீதம் உயர்ந்தும் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|