பதிவு செய்த நாள்
29 மே2014
17:54
மும்பை : இந்திய பங்குசந்தைகள் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தன. இதனால் இருதினங்களுக்கு முன்னர் கூட சென்செக்ஸ் 25 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. இருப்பினும் கடந்த இருதினங்களாக பங்குசந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன. அதிலும் இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ் தலைவர் கிருஷ்ணமூர்த்தி பதவி விலகியதை தொடர்ந்து அந்த நிறுவன பங்குகள் விலை 8 சதவீதம் அளவுக்கு சரிந்தன. மேலும் உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட சுணக்கத்தால் முக்கிய துறை பங்குகளும் சரிந்தன. இதனால் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க சரிவிலேயே முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 321.94 புள்ளிகள் சரிந்து 24,234.15-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 94 புள்ளிகள் சரிந்து 7,235.65-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 22 நிறுவன பங்குகள் விலை சரிவிலேயே முடிந்தன. குறிப்பாக இன்போசிஸ் பங்குகள் 8 சதவீதம் சரிந்தது. இவை தவிர விப்ரோ 2.63 சதவீதமும், எச்சிஎல்., 2.5 சதவீதமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1.42 சதவீதமும் சரிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|